திருவாரூர், அக்.13 - குடவாசல் தெற்கு ஒன்றி யச் செயலாளராக டி.லெ னின் தேர்வு செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தெற்கு ஒன்றிய 24 ஆவது மாநாடு குடவா சலில் உள்ள கட்சியின் தியாகி தங்கையன் அலுவ லகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு செங்கொ டியை மூத்த தோழர் ஏ.வி. சுப்பிரமணியன் ஏற்றினார். மாநாட்டுக்கு எஸ்.கிருஸ்து வநாதன், கே.ஜெகதீஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.கலை மணி துவக்க உரையாற்றி னார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.வீர பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். 11 பேர் கொண்ட ஒன்றி யக் குழு தேர்வு செய்யப் பட்ட நிலையில், குடவாசல் தெற்கு புதிய ஒன்றியச் செயலாளராக டி.லெனின் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி புதிய நிர்வா கிகளை அறிவித்து நிறை வுரையாற்றினார். ஒன்றியத்தில் தூர்வாரப் படாத வாய்க்கால், குளங் களை தூர்வாரி பாய்ச்சல் வடிகால் வாய்க்காலை சீர மைக்க வேண்டும். கிராமப் புற இணைப்பு சாலைகளை சீரமைத்து கிராமங்களின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் குளறு படிகளைக் களைந்து நூறு நாள் வேலையை 200 நாட் களாக உயர்த்தி சம்பளம் ரூ.319 வழங்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.