திருச்சிராப்பள்ளி, டிச.7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் எழுதிய ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ நூல் வெளியீட்டு விழா செவ்வா யன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். நூலை அறிமுகப்படுத்தி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் பேசினார். நூலை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வெளியிட, அதனை சிபிஐ தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பி னர் எம்.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் எம். ஜெயசீலன், காங்கிரஸ் திருச்சி மாநகர தலை வர் வி.ஜவஹர், மதிமுக மாநகர செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் க.சுரேஷ், மாநகர் மாவட்ட செயலாளர் கே.சிவா, விடு தலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் கே.என்.அருள், அ.க.தமிழாதன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரகு மான், மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.முகமதுராஜா, மனித நேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் ஏ.பைஸ்அகமது ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.ரெங்கராஜன் வரவேற்றார். ஜங்சன் பகுதிச் செயலாளர் எம்.ரபீக்அஹ மது நன்றி கூறினார்.