districts

img

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப்.26 - சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் 1.6.2003-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அதற்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5200 என்றும் நிர்ணயிக்கப்பட்டு சம வேலைக்கு முரணான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே கல்வித்தகுதி, ஒரே பதவிக்கு இரு வேறு ஊதியங்கள் வழங்கப்பட்டு வரும் முரண்பாட்டை சரி செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் இந்த முரண்பாட்டை சரிசெய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனைத் தொடர்ந்து சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரமுத்து தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் திவ்யா, கனிமொழி, சத்யா, கில்பர்ட் ஆகியோர் பேசினர். அரியலூர் அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாவட்டத் தலைவர் நடராசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அந்தோணி ஆனந்த் கண்டன உரையாற்றினார்.  தஞ்சாவூர் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு கூட்டமைப்பின் நிர்வாகி சிலம்பரசி தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.