திருவில்லிபுத்தூர், ஏப்.26 - விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 106 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. இந் தாண்டு அதிகளவு வெயில் அடிப்பதால் கால்நடைகள் தண்ணீரின்றி தவித்து வரு கின்றன. கிடை மாடுகள் படும் பாடு சொல்லி மாளாது. இந்நிலையில், இராஜ பாளையம் மற்றும் தெற்கு வெங்காநல்லூர், நத்தம் பட்டி மற்றும் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் கரும்பு 500 ஏக்கருக்கு மேல் பயிரிடப் பட்டுள்ளது. உரிய தண்ணீர் இல்லாமல் இவை வாடி வதங்கி போய் காணப்படு கின்றது. கோ 12032 ரக கரும்பு, வறட்சியைத் தாங்கி வளர்ந் தாலும், அடிக்கும் வெயி லுக்கு எதுவுமே தாக்குப் பிடிக்க முடியாத நிலை உள் ளது. பல ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்த கரும்பு பயிர் கருகுவது கண்டு, விவசாயி கள் மன வேதனை அடைந் துள்ளனர். பயிர்கள் வாடி யது குறித்து வருவாய்த் துறையினர் கணக்கீடு செய்து, இழப்பீடு உரிய விவ சாயிகளுக்கு வழங்கி உதவு மாறு கரும்பு விவசாயி கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.