districts

img

நிலவிலிருந்து கனிம வளத்தை பூமிக்கு கொண்டு வர வாய்ப்பு

தஞ்சாவூர், அக்.11- நிலவிலிருந்து பூமிக்குத் தேவை யான கனிம வளத்தை 10 ஆண்டுகளில்  கொண்டு வர வாய்ப்புள்ளது என சந்திர யான்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.  தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தஞ்சாவூர் தொழில்,  வர்த்தக சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில்  அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவில் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் செயற்கைக் கோள் அனுப்பும் பணி தொடங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, இத்துறை யில் இந்தியா படிப்படியாக முன்னேறி உலக அளவில் முன்னணியில் உள்ள 3 நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து வேளாண்மை, சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, நீர் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு,  விண்வெளி அறிவியல் உள்ளிட்ட  தேச நலனுக்காக 125 அதிநுட்ப  செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு உள்ளன. மேலும், வர்த்தக ரீதியில் 34  வெளிநாடுகளுக்காக 424 செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளோம். நிலவுக்கு இதுவரை 3 முறை விண் கலனை அனுப்பியுள்ளோம். நிலவில் உள்ள கனிம வளத்தை அடுத்த 3, 4  ஆண்டுகளில் ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இப்போது, நிலவின் தென் துரு வத்தில் ஆய்வு செய்யத் தயார் என சீனா வும் அறிவித்துள்ளது. ஆனால், நிலவின்  தென் துருவத்தில் முதல் முதலில் இந்தியா ஆய்வை தொடங்கியது என்ப தால், நம் நாடுதான் தலைமை பொறுப்பை ஏற்கும் அவசியம் உள்ளது. பூமிக்குத் தேவையான கனிம  வளத்தை நிலவிலிருந்து இன்னும் 10  ஆண்டுகளில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, நிலவிலி ருந்து ஹீலியத்தை குறைந்த செல வில் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது.  நிலவைவிட குறைந்த செலவில் செவ் வாய்க்கு செல்ல முடியும். அதற்கான சூழலை உருவாக்கும் காலம் விரை வில் வரும். முன்பு செயற்கைக்கோளை விண் ணில் செலுத்துவதற்கு அதிக செலவு ஏற்பட்டது. இப்போது, குறைந்த செலவில் செயற்கைக்கோளை ஏவும் நிலைக்கு இந்தியா முன்னேறியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு விண்ணில் சிறிய செயற்கைக்கோள்களை அனுப்புவது அதிகரித்து வருகிறது. விரைவில் நாள் தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும். செயற்கைக்கோளை குறைந்த செலவில் விண்ணுக்கு அனுப்புவதில் இந்தியாவுக்கும், எலான் மஸ்க்குக்கும் போட்டி நிலவுகிறது. ஆனால், எலான்  மஸ்கை விட குறைந்த செலவில் செயற் கைக்கோளை அனுப்புவதற்கு குலசே கரப்பட்டினம் மண் உதவுகிறது. இப்போது செயற்கைக்கோள் களை விண்ணில் அனுப்புவதற்கான பாகங்கள், சாதனங்கள் வெவ்வேறு இடங் களிலிருந்து கொண்டு வரப்பட்டு ஏவப் படுவதால் செலவு அதிகமாக இருக் கிறது. இந்த வசதிகள் அனைத்தையும் குலசேகரப்பட்டினத்தில் ஏற்படுத்தி னால் செலவு இன்னும் குறையும்.  இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பழ.மாறவர்மன் தலைமை வகித்தார். செயலர் அ.குகனேஸ்வரன், பொருளா ளர் சா.ஆசிப் அலி உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.