districts

img

மந்திரமா? தந்திரமா? - அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வாக திங்கள்கிழமை மந்தி ரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மான்போர்ட் பள்ளி, பிரக தாம்பாள் பள்ளி, மாட்சிமை தங்கிய  மன்னர் கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வை அறிவியல் இயக்க மாநி லச் செயற்குழு உறுப்பினர் எல்.பிர பாகரன் தொடங்கி வைத்தார். மாநி லச் செயலாளர் டாக்டர் எஸ்.ஆர். சேதுராமன், வெறும் கையில் இருந்து விபூதி வரவழைத்தல், கை களை சிவப்பு நிறமாக மாற்றுதல், பந்துகளை காணாமல் ஆக்குதல், மூன்று கயிறுகளை ஒரே கயிறாக மாற்றுதல் உள்ளிட்ட, குழந்தைகள் வியக்கும் வகையிலான மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாவட்டத் துணைத் தலைவர்  க.சதாசிவம், தொடு உணர்வு அறி தல், பயமில்லாமல் இருப்பது எப்படி? என்பது போன்ற எளிய அறி வியல் பரிசோதனைகளை செய்து காண்பித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் நிகழ்வினை  ஒருங்கிணைத்தார். புத்தகத் திரு விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் அ.மணவாளன், எம்.வீரமுத்து, முனைவர் ஆர்.ராஜ்குமார், கவிஞர்  ஜீவி மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் ஜெயராம் கு.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.