districts

img

சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

மதுரை, ஜூலை 12-  மதுரை மாவட்டம் பரவை பேரூ ராட்சி  3 மற்றும் 4 ஆவது வார்டு  பகுதிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த 700 க்கும் மேற்  பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டு களாக வசித்து வருகின்றனர்.  இவர்  களின் குழந்தைகளான 200-க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பரவை, சமயநல்லூர், சத்திய மூர்த்தி நகர் ஆகிய அரசு பள்ளி களில் பயின்று வருகின்றனர்.   இந்நிலையில் இவர்களுக்கு (எஸ்டி) இந்து காட்டுநாயக்கன் பழங்குடியினர் என்ற பெயரில் கடந்த ஆண்டு வரை சாதி சான்றி தழ் வழங்கப்பட்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டாக எஸ்டி இந்து  காட்டுநாயக்கன் பழங்குடியினர் என்ற பெயரில் சாதிச்சான்றிதழ் வழங்க முடியாது என மதுரை மாவட்ட கோட்டாட்சியர் தெரி வித்தார். இதனைக் கண்டித்து  200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ   மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, அவர்களது பெற்றோர்களுடன் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கோயில் மந்தை திடலில்  காத்தி ருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.   இது குறித்து தகவல் அறிந்து  வந்த சமயநல்லூர் காவல்துறை யினர் மற்றும் வடக்கு வாட்டாட்சி யர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ  மாணவிகள் மற்றும் பெற்றோர்களி டம் ,பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்கி றேன் என்று கூறினார்.  அதனைத் தொடர்ந்து  தற்காலி கமாக போராட்டம் வாபஸ் பெறப்  பட்டது. அதே நேரத்தில் கோரிக்  கைகள் நிறைவேற்றாத பட்சத்தில்  அடுத்தக்கட்ட போராட்டம் தொட ரும் என்று தெரிவித்துள்ளனர்.