districts

பெற்றோரிடம் கோபித்து வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

திருச்சிராப்பள்ளி, ஏப்.25 - திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, திருச்சியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து  வருகிறார். கடந்த ஏப்ரல் 19 அன்று  வீட்டில் பெற்றோர்களிடம் கோபித்து  கொண்டு வீட்டை விட்டு வெளியேறி னார். வெளியே சென்ற சிறுமி திருச்சி அருகே உள்ள கல்லணைக்கு பேருந்தில்  சென்றுள்ளார். பின்னர் போக்கிடம் தெரி யாமல், அங்கிருந்த பூங்காவில் சுற்றித்  திரிந்துள்ளார். இரவு வெகு நேரமான தால், அங்கிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒரு வர், சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.  சிறுமி வீட்டை விட்டு வெளியேறி யதை அறிந்து கொண்ட அந்த நபர், சிறுமியை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து, பின்னர் சிறுமியை கோவைக்கு அழைத் துச் சென்றுள்ளார். அங்கு ஒரு விடுதி யில் தங்க வைத்து சிறுமியை பாலியல்  வன்கொடுமை செய்ததாக கூறப்படு கிறது. பின்னர் சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு  கூறிவிட்டு அந்த நபர் நழுவியுள்ளார்.  இதையடுத்து, சிறுமி மறுநாள் திருச்சிக்கு வந்துள்ளார். அதன் பின்ன ரும் வீட்டுக்குச் செல்ல விரும்பாத அந்த  சிறுமி, மணப்பாறை பகுதியில் உள்ள  தனது உறவினர் வீட்டுக்குச் செல்ல  முடிவு செய்து, பேருந்தில் ஏறி மணப்பாறை  சென்றுள்ளார். மணப்பாறை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய சிறுமி யிடம், அங்கிருந்த ஒரு நபர் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.  சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு  செல்ல வேண்டும் என கூறியதை யடுத்து, சிறுமியை உறவினர் வீட்டிற்கு  அழைத்து செல்வதாக கூறிய அந்த  நபர், சிறுமிக்கு உடைகள், காலணி  உள்ளிட்டவற்றை வாங்கித் கொடுத்துள் ளார். பின்னர், சிறுமியை அவர் ஒரு விடு திக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதற்கிடையே சிறுமி மாயமானது தொடர்பாக திருச்சியில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி னர். மேலும், மாயமான சிறுமியை  தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி  வந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள  பல்வேறு பகுதிகளில் தேடிய தனிப் படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சியில் மாயமான சிறுமி மணப்பாறை வந்த தும், அங்கிருந்து அவரை ஒருவர் அழைத் துச் சென்றதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து, விடுதியில் இருந்த அந்த  சிறுமியை மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனர்.  பின்னர் இதுதொடர்பாக சிறுமி யிடம் தனிப்படை போலீசார் விசாரணை  நடத்தியதில், சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த  முல்லை முருகேசன்(45) என்பவரை பிடித்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பாகஅவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரு கிறது. மேலும் சிறுமியை கோவைக்கு அழைத்துச் சென்ற அந்த மர்ம நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் தனிப்படை போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.