districts

பள்ளி செல்லா குழந்தைகள் 5 பேர் பள்ளியில் சேர்ப்பு

பாபநாசம், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு  உட்பட்ட பகுதிகளில், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியப்பட்டனர்.  இதில், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் இராம லிங்கம் முன்னிலையில், வட்டார வளமைய மேற்பார்வை யாளர் (பொ) முருகன், வட்டார கல்வி அலுவலர் ஜெய மீனா வழிகாட்டுதலின் பேரில் ஐந்து குழந்தைகள் வயதிற்கு ஏற்ற வகுப்பில் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இக்களப் பணியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்று நர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.