தஞ்சாவூர், ஆக.21 -
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேது பாவாசத்திரத்தில், பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடை பெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் சேவை மையத்தை திறந்து வைத்தார். பாரத ஸ்டேட் வங்கி தஞ்சை மண்டல மேலாளர் ஏ.ஆல்வின் மார்ட்டின் ஜோசப், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பாரத ஸ்டேட் வங்கி தஞ்சாவூர் நிதி சேவை மேலாளர் டி.பழனி முத்து, பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளை மேலா ளர் எம்.சபீனா ஷாலோம் ஆகியோர் துவக்கி வைத்த னர்.