districts

img

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

அறந்தாங்கி, நவ.29 -  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு  ஊராட்சியில் ‘மரம் வளர்போம்; மழை பெறுவோம்; வன விலங்குகளைக் காப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் மேலப்பட்டு ஊராட்சியில் உள்ள கண்மாய்களில் மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர், அயூப்கான் தலைமை யில் அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முக நாதன் முன்னிலையில் பழ மரக்கன்றுகள் நடப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர், குமரவேல் மற்றும் மாவட்ட கவுன் சிலர் சரிதா மேகராஜன், துணைத் தலைவர், வார்டு  உறுப்பினர் கள், கிராமத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.