districts

ஆட்சியர் அறிவித்த கூலி ரூ.470 வழங்குக!

திருவாரூர், மே 7 - சிஐடியு நகராட்சி துப்புரவுத் தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பாக, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவ லகம் முன்பாக கோரிக்கைகளை வலியு றுத்தி செவ்வாயன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கூத்தாநல்லூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் மாவட்ட  ஆட்சியர் அறிவித்த சட்டக் கூலி நாள் ஒன்றுக்கு ரூ.470 வழங்க வேண்டும். 11.3.24  அன்று கூத்தாநல்லூர் நகராட்சி ஆணை யர் உறுதியளித்த ஒப்பந்தத்தின் அடிப்படை யில், ஏப்ரல் 2023 முதல் அரியருடன் சம்பளம்  வழங்க வேண்டும்.  இபிஎப்., இஎஸ்ஐ கணக்குகள் சரிவர பரா மரிக்கப்படவில்லை. மாதந்தோறும் சம்பள  பில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச்  செயலாளர் டி.முருகையன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி, உள்ளாட்சி சங்க மாவட்டத் துணைத் தலைவர் கே.சிவ சுப்பிரமணியன், நகராட்சி சங்கத்தின் செய லாளர் முருகேசன், தலைவர் சுந்தர் உள்ளிட் டோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி உரையாற்றினர்.  நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட தூய்மைப் பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;