புதுக்கோட்டை, அக்.19 - பணம் செலுத்தியும் இயந்திரத்தை வழங்க மறுத்த சென்னையைச் சேர்ந்த தனி யார் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தர விட்டுள்ளது. புதுக்கோட்டை எஸ்.எம். நகரைச் சேர்ந்த வர் எம்.முகமது இப்ராஹிம். இவர் சென்னை அம்பத்தூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை சுயதொழில் தொடங்கும் நோக்கில் வாங்க முற்பட்டார். இதற்காக அந்த இயந்திரத்தின் மொத்த விலையான ரூ.4.89 லட்சத்தில், கடந்த 2022 நவம்பர் 28 அன்று ரூ.3.75 லட்சத்தை செலுத்தி யுள்ளார். 2023 ஜனவரி மாதம் இயந்திரம் அனுப்பி வைக்கப்படும் என்ற உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை. அதன்பிறகு, இயந்திரத்தை அனுப்பி வைக்கக் கோரி பலமுறை அந்த நிறுவனத்து டன் பேசியுள்ளார் இப்ராஹிம். ஒரு கட்டத்தில் பணத்தையாவது திரும்பத் தருமாறும் கேட்டு வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆயினும் இயந்திரம் அனுப்பி வைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தில் முகமது இப்ராஹிம் வழக்கு தொட ர்ந்தார். எதிர் தரப்பினரான அந்தத் தனியார் நிறுவனத்தினர் இயந்திரத்தை இப்ராஹிம் பெற மறுத்து தகராறு செய்ததாகக் கூறினா லும், அதற்கான ஆவணங்கள், சாட்சிகள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில், குறைதீர் ஆணையத்தின் தலைவர் த.சேகர் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், “ஆர்டர் செய்த சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை எந்தவித நிபந்த னையும் இன்றி உடனடியாக முகமது இப்ரா ஹிமுக்கு வழங்க வேண்டும். அல்லது அவர் செலுத்திய ரூ.3.5 லட்சத்தை, செலுத்தப்பட்ட தேதியிலிருந்து ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டி யுடன் சேர்த்து திரும்ப வழங்க வேண்டும். தனியார் நிறுவனத்தினரின் சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக, பாதிக்கப்பட்ட முகமது இப்ரா ஹிமுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மேலும், வழக்குச் செலவுகளுக்காக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தீர்ப்பின் நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் இவற்றை வழங்காவிட்டால், இயந்திரத்துக்கு செலுத்தப் பட்ட தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றுக்கு 12 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.