districts

img

வரலாற்றின் மிக முக்கிய ஆவணமாக சங்க இலக்கியம் திகழ்கிறது

புதுக்கோட்டை, செப்.18 - புலம்பெயர் வரலாற்றின் மிக முக்கியமான ஆவணமாக சங்க இலக்கி யம் திகழ்கிறது என்றார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்  ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன்  எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம் -  சிந்து முதல் வைகை வரை’ என்ற  நூலின் அறிமுக விழா புதுக்கோட்டை யில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: சிந்துவெளிப் பண்பாட்டில், உடல் மொழி தொடங்கி செவ்வியல் இலக்கி யம் வரையிலான எச்சங்களைத் தேடுவ தாக இந்த நூல் அமைந்திருக்கிறது. திராவிட மொழி பேசும் மக்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்திருக்கின்றனர் என் பதை இந்நூல் சான்றுகளுடன் நிறுவு கிறது. மனிதன் இடம்பெயர்ந்ததால் மட்டுமே நாகரிகம் வளர்ந்துள்ளது. ஊர்ந்துகொண்டே இருந்ததால்தான் ஊர் எனப் பெயர் வந்துள்ளது. தமிழ் நாட்டில் உள்ள பல ஊர்களின் பெயர் கள் வட மாநிலங்களிலும், பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளி லும் உள்ளன. பிடி மண் எடுத்துவந்து புலம்பெயர்ந்த இடங்களுக்கு தாங்கள்  விட்டுவந்த ஊரின் பெயரை வைத் துள்ளனர். சிந்துவெளியில் இருந்து ஒரு பகுதி யினர் படிப்படியாக புலம்பெயர்ந்து தெற்கே வந்து சேர்ந்து இருக்கின்ற னர். அங்கிருந்து வாய்மொழியாக வந்த  வரலாற்றை சங்க இலக்கியம்தான் ஆவணமாக பதிவு செய்துள்ளது. வேறு  எங்கும் இது பதிவு செய்யப்படவில்லை. சங்க இலக்கியத்தில் உள்ள பல  காட்சிகள் இன்றைக்கும் வட மாநி லங்களில் உள்ள நிலப்பரப்பையும், விலங்குகளையும், மக்களின் வாழ் நிலையையும், கால நிலையையும் குறிப்பதாக உள்ளன.  சிந்து சமவெளியில் நடந்த ஆய்வு களில் கிடைத்த கீறல்களைப் போன்றே, கீழடியிலும் ஆதிச்சநல்லூரிலும் கீறல் கள் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் திராவிட மொழி பேசும் மக்கள் இந்திய  நிலப்பரப்பு முழுவதும் வாழ்ந்து இருக் கின்றனர் என்பதை ஆய்வாளர், 30  ஆண்டுகள் கடும் உழைப்பைச் செலுத்தி நிறுவியுள்ளார். மறுக்க முடி யாத பல உண்மைகளை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

முசோரியில் ஐஏஎஸ் பயிற்சியில் இருந்தபோது ஆய்வாளர் ஐராவதம்  மகாதேவன் அங்கே உரையாற்றியிருக் கிறார். அந்த உரையைக் கேட்ட பிறகு,  அவரைப் போல நாமும் ஆய்வில்  ஈடுபட வேண்டும் என்று பாலகிருஷ் ணன் கண்ட கனவு, இந்த நூல் மூலம்  நிறைவேறியிருக்கிறது. இந்த நூல் என்ன சொல்கிறது என்பன பற்றிய குறிப்புகளை மட்டுமே வைத்து, 100  இடங்களில் ஒளிக்காட்சி வகையிலான கூட்டங்களை நடத்தத் திட்டமிட உள்ளோம். இவ்வாறு தமிழ்ச்செல்வன் பேசி னார். நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் தனது ஏற்புரையில், “மரத்திற்கு வேர் களைப் போல மனிதனுக்கு கால்கள் முக்கியம். பயணங்கள் மூலம் மனிதன்  தனது வாழ்க்கையை மேம்படுத்தி யுள்ளான். பாதையைவிட பயணம் முக்கியம். பயணத்தைவிட பயணி முக்கியம். ஒரு மனித இனம் கடந்து வந்த வரலாற்றை சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வோடு சங்க இலக்கியம் பேசுகிறது.  கடந்த காலங்களில் பல மொழிகள்  காணாமல் போய்விட்டது. எந்தச் சூழ லிலும் அழியாமல் செழித்து வளர்ந்த மொழி தமிழ். தமிழ்மொழியின் மிகச் சிறந்த கொடையாக சங்க இலக்கியம்  உள்ளது. எனக்கு நானே பலமுறை பரிசீ லனைக்கு உட்படுத்திய பிறகுதான இந்த நூலை வெளியிட்டேன். முதலில்  ஆங்கிலப் பதிப்பாக இந்த நூல் வெளி வந்ததால் சங்க இலக்கியம் உலகின் பல  நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது” என்றார். விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் வாழ்த்திப் பேசினார். மாநிலத் துணைத்  தலைவர் நா.முத்துநிலவன் தொடக்க வுரையாற்றினார். முன்னதாக, மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சர வணன் வரவேற்க, மாவட்டப் பொருளா ளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஸ்ரீரசா,  ஆர்.நீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.