கொள்கை விளக்க கருத்தரங்கம்
தஞ்சாவூர், டிச.26 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், திராவி டர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள், அம்பேத்கர் 67 ஆம் ஆண்டு நினைவு நாள், வைக்கம் போராட்ட நூற் றாண்டு கொள்கை விளக்க கருத்தரங்கம் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் தலை மையில் நடைபெற்றது. கருத்தரங்கில், திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால்.பிரபா கரன், சாக்கோட்டை இளங் கோவன், தமிழ்வழிக் கல்வி இயக்க தலைவர் சின்னப்ப தமிழர் ஆகி யோர் உரையாற்றினர். தீத்தடுப்பு ஒத்திகை தஞ்சாவூர், டிச.26 - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெருந்த லைவர் காமராசர் அரசு மருத்துவமனையில், தீ தடுப்பு மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடத்தப் பட்டது. இதில், பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் வீ.சீனிவாசன் தலைமையிலான தீய ணைப்பு வீரர்கள், அரசு மருத்துவமனை மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர் களுக்கு செயல் விளக்கம் மூலம் பயிற்சி அளித்த னர். அரசு மருத்துவமனை யைச் சேர்ந்தோர், பொது மக்கள் பயனடைந்தனர்.
கிராமச் செயலகம் திறப்பு
பாபநாசம், டிச.26 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சர போஜி ராஜபுரத்தில் ரூ.42. 65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராமச் செயல கத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இதையொட்டி சர போஜிராஜபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் குத்து விளக்கேற்றினார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பூமா, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். இதேபோன்று பாப நாசத்தை அடுத்த இராஜ கிரியில், ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப் பள்ளி கிழக்கு, மேற்கில் தலா ரூ. 30.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப் பறை கட்டிடத்தையும் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார். இதை யொட்டி ராஜகிரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நிகழ்ச்சி நடை பெற்றது.
ரயில்வே ஊழியர் கடத்தல்
திருச்சிராப்பள்ளி, டிச.26 - திருச்சி தென்னூர் பட்டாபிராமன் தெருவைச் சேர்ந்தவர் சந்து முகமது (62). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவர், முதல் மனைவி இறந்த பின், பொள்ளாச்சியைச் சேர்ந்த பல்கீஸ் பானு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கண வன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இத னால், பொள்ளாச்சி நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் சந்து முகமதுவை ஒரு கும்பல் காரில் கடத்தி சென் றுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த சந்து முகமது, சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசில் அளித்த புகாரில், தன்னுடைய 2-வது மனைவி பல்கீஸ் பானு மற்றும் அவரது ஆதரவா ளர்கள் ஷாஜகான், அறி வழகன் உள்பட 4 பேர்தான் தன்னை கடத்தி சென்ற தாக கூறியுள்ளார். போலீ சார் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிந்துள்ளனர்.
பேராவூரணி, சேதுபாவாசத்திரத்தில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு
தஞ்சாவூர், டிச.26 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில், ரூ.1.27 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, சேதுபாவா சத்திரம் ஒன்றியம், ரெண்டாம்புளிக்காடு ஊராட்சி, தண்டா மரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.29.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப் பறை கட்டடத்தை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலை வர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத் தார். பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், காலகம் ஊராட்சி, கொன்றைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஒட்டங் காடு ஊராட்சி, பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி, புனல்வாசல் ஊராட்சி (வாடிக்காடு) ஒன்றிய தொடக்கப் பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைகளை சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத்தார்.
கரூரில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
கரூர், டிச.26 - ஒன்றிய மோடி அரசின் அமலாத் கத்துறை ஆய்வையொட்டி கரூரில் மணல் குவாரிகள் நிறுத்தி வைக்கப்பட் டதை கண்டித்தும், உடனடியாக மணல் குவாரிகளை திறந்திட வேண்டும். கரூர் மாவட்டத்தில் செயல்படும் இரண்டு மணல் குவாரிகளில் மாட்டு வண்டி களுக்கு மட்டுமே நேரடியாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்ற அரசின் முடிவை அமல்படுத்த வேண்டும். மணல் மாட்டு வண்டி தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத் தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு கரூர் மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் பழரசம் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து பேசி னார். டாஸ்மாக் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கட்டு மான சங்க மாவட்டத் தலைவர் ப.சர வணன், மணல் மாட்டுவண்டி சங்க மாவட்டச் செயலாளர் ஜி.பிரகாஷ் ஆகி யோர் பேசினர். மாவட்டப் பொருளா ளர் வி.கந்தசாமி நன்றி கூறினார்.
அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தை 245 பேருக்கு வழங்க வேண்டும்
அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை
அரியலூர், டிச.26 - தா.பழூர் மதனத்தூர் சாலையில் உள்ள இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தை 245 பேருக்கு வழங்கி ஆதிதிராவிட நலக் குடியிருப்பு அமைத்து, பட்டா வழங்கி வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் மதனத்தூர் செல்லும் சாலையில் இந்து அறநிலையத் துறைக்கு (காசி விசுவநாதர் ஆலயத்திற்கு ) சொந்தமான 13 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு கடந்த 2009-இல் வீட்டுமனைப் பட்டா கேட்டு நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தா.பழூர் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் 245 பேருக்கு பிரித்து கொடுத்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தா.பழூர் விவசாயி மதியழகன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் எ.செல்வம் உள்ளிட்ட பலர் பேசினர். சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கதிர்வளவன், மாவட்டக் குழு உறுப்பினர் செந்தில்வேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் பொன். தங்கராசு, மாவட்ட அமைப்பாளர் அ.வெ.வேல்முருகன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஆதி திராவிடர் நல குடியிருப்பு அமைக்க வசதியாக, மதனத்தூர் சாலையில் உள்ள இந்துசமய அறநிலையத் துறைக்குச் (காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு) சொந்தமான இடத்தை வீடு இல்லாத 245 பேருக்கு வழங்க வேண்டும். அவர்களுக்கு பட்டா வழங்கி, அங்கு வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தா.பழூர் பகுதியில் 20 பேர் கொண்ட தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவை உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மனு கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
போதை தடுப்பு பிரிவு காவல்துறை எனக் கூறி
ஐடி ஊழியரிடம் ரூ.10.11 லட்சம் மோசடி
தஞ்சாவூர், டிச.26 - தஞ்சாவூரை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரிடம், மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் போன்று, வீடியோ காலில் பேசி நூதன முறையில் 10.11 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபர் களை இணையதளக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (48) தனியார் தகவல் தொழில்நுட்ப நிறு வன ஊழியராக உள்ளார். தற்போது ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ அடிப்படையில், வீட்டிலிருந்து பணியாற்றி வரும் நிலை யில், டிச.21 அன்று மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுவதாக ஒரு நபர் பேசியுள்ளார். அப்போது பேசிய நபர், வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில், போதைப் பொருட்கள், ரத்து செய்யப்பட்ட சிம் கார்டுகள் உட்பட பல பொருட்கள் இருந்தன. உங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளதாகக் கூறி மிரட்டி யுள்ளார். இருப்பினும், அந்த தகவல் தொழில்நுட்ப நிறு வன ஊழியர், “வெளிநாட்டிற்கு நான் எந்தப் பார்சலும் அனுப்பவில்லை” என கூறியுள்ளார். போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் போன்று அமைப்பு கொண்ட ஒரு அறையில் இருந்து வீடியோ காலில் பேசிய நபர்கள், “தனி அறையில் இருந்துதான் பேச வேண்டும். வேறு யாரிடமும் ஆலோசனை செய்யக் கூடாது. நீங்கள் பார்சல் அனுப்பவில்லை என்றால், ஆன் -லைனில் புகார் செய்து, அதற்கு பணம் கட்ட வேண்டும். நாங்கள் ஆய்வு செய்து உங்கள் மீது தவறு இல்லை என்றால் பணத்தை திரும்ப தருவோம்” என பேசியுள்ளார். இதனால் பயந்து போன சரவணன், அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாக 10.11 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். மீண்டும் வீடியோ காலில் வந்த நபர்களிடம், ‘உங்கள் மீது சந்தேகம் இருப்பதாக’ சரவணன் கூறியவுடன், மர்ம நபர் இணைப்பை துண்டித்துவிட்டார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரவணன், தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவில் அளித்த புகார் குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமத்துவபுரத்தில் காலியாகவுள்ள வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், டிச.26- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம், புதுக் குடி ஊராட்சி, புதுக்குடி பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் இதரர் வகுப்பினைச் சார்ந்த பயனாளிக்கு ஒரு வீடு மட்டும் காலியாக உள்ளது. இந்த சமத்துவபுர வீட்டிற்கு பூதலூர் ஊராட்சி ஒன்றியம், புதுக்குடி ஊராட்சியிலிருந்து தகுதியான, மேற்குறிப்பிட்ட வகுப்பினைச் சார்ந்த, வீடற்ற பயனாளி களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் வீடற்ற தகுதி யுள்ள பயனாளிகள் இசைவு கடிதம், ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பூத லூர் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவல ருக்கு (வ.ஊ)-க்கு 30.12.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை குடும்பத் தலைவியாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணு வத்தினர், ஓய்வுபெற்ற துணை ராணுவத்தினர், ஊட்டச் சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் உள்ள குடும்பங் கள், திருநங்கைகள், துணை இயக்குநரால் (சுகாதாரப் பணிகள்) சான்றளிக்கப்பட்ட எச்.ஐ.வி, எய்ட்ஸ், டிபி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், மன ரீதி யாக பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிக்கப்பட்டோர், ஏழைகளை கண்டறியும் கணக்கெ டுப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள மிகவும் ஏழைகள் மற்றும் ஏழைகள் ஆகிய நலிவுற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தஞ்சாவூர் தொலைபேசி எண் - 04362 231190 அல்லது மின்னஞ்சல் முகவரி housingthanjavur@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
சுமைப்பணி தொழிலாளிக்கு விரல்கள் துண்டிப்பு எஎம்ஆர்ஆர் மில் உரிமையாளர் மீது வழக்கு
தேனி, டிச.26- தேனியில் பிரபல மில்லில் சுமைப்பணி தொழிலாளி யை கட்டாயப்படுத்தி வேலை வாங்கிய சம்பவத்தில் கை விரல் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து எஎம்ஆர்ஆர் மில் உரிமையாளர் சந்திரகுமார், மேற்பார்வையாளர் நந்த குமார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் அருகே தாமரைக்குளம் காந்திஜி தெரு வைச் சேர்ந்தவர் வெயிலான் மகன் தாளமுத்து (48). இவர் தேனி அருகே சந்திரகுமார் என்பவருக்கு சொந்த மான எஎம்ஆர்ஆர் மில்லில் சுமைப்பணி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் .இயந்திரத்தை இயக்க தெரியாத தாளமுத்துவை ,மில்லின் மேற்பார்வையாளர் நந்த குமார் என்பவர் இயந்திரத்தில் தூசி நிரம்பி முட்டிக் கொண்டிருந்ததை அள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது .தூசியை அள்ளும்போது எதிர்பாராத விதமாக இரண்டு விரல்கள் இயந்திரத்தில் சிக்கி துண்டா னது. இது தொடர்பாக தேனி அல்லிநகரம் காவல்நிலை யத்தில் தாளமுத்து அளித்த புகாரின் பேரில் மில் உரிமை யாளர் சந்திரகுமார் ,மேற்பார்வையாளர் நந்தகுமார் ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
சிவகாசி, டிச.26 விருதுநகர் மாவட்டம் சிவகாசி - விளாம்பட்டி அருகே யுள்ள ராஜதுரை நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் (50). புறநகர் பகுதியான ராஜதுரை நகர் பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை கார ணமாக, இங்குள்ள காட்டுப் பகுதியிலிருந்து விஷப்பாம்புகள் கிளம்பி வீடுகளுக்குள் புகுந்து வருவது அதிகரித்துள்ளது. முத்துராமலிங்கம் என்பவரது வீட்டிற்குள், சுமார் 10 அடி நீளமுள்ள மஞ்சள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள், இது குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். பின்னர் நிலைய அலுவலர் வெங்கடேஷன் உத்த ரவின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், விஷப்பாம்பை உயிருடன் மீட்டனர்.
தலித் உரிமை போராளி தங்கராசு
திருவாரூர், டிச.26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பி.என். தங்கராசு மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ.பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: நெடும்பலம் ஊராட்சி மங்களநாயகிபுரம் கிராமத்தில் பிறந்து, இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர் தோழர் பி.என்.தங்கராசு. 1976 இல் தோழர் ஆர்.நல்லையன் இறந்தபோது, அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டதோடு, உழைப்பைச் செலுத்தி, தன் தலையில் கல் சுமந்து நினைவிடம் கட்ட உதவியவர். நெடும்பலம் ஊராட்சியில் தலித் சமூகத்தினருக்கு முடிவெட்டக் கூடாது என்ற நிலையை எதிர்த்து, போராட்டம் நடத்தி, வழக்குகளை சந்தித்து, தலித் மக்களுக்கும் முடிவெட்ட காரணமாய் இருந்தவர் தோழர் தங்கராசு. ஆதிக்க சாதியினரின் அடாவடிதனத்திற்கு முடிவுகட்ட அவர் நடத்திய போராட்டங்கள், சந்தித்த வழக்குகள் ஏராளம். இறுதிமூச்சி வரை இயக்கத்தில் பணியாற்றிய தோழர் பி.என்.தங்கராசு அவர்களுக்கு சிபிஐ விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரை இழந்த வாடும், அவரது மனைவி ஜானகி, மகன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி பெரியார் சிலைக்கு மாலை
நீதிமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆஜர்
வழக்கு ஜன.11-க்கு ஒத்திவைப்பு
வழக்கு ஜன.11-க்கு ஒத்திவைப்பு திருச்சிராப்பள்ளி, டிச.26 - கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரி யார் சிலைக்கு, அப்போது திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தி.மு.க. மாநகரச் செய லாளர் மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, திமுக நிர்வாகி கள் ராமதாஸ், பாலசுப்பிரமணியன் உள்ளிட் டோர் அனுமதியின்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாக கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஒன்றாவது நீதித் துறை நீதிமன்றத்தில் (ஜூடிசியல் கோர்ட்) நடந்து வருகிறது. இதற்கான விசாரணை செவ் வாயன்று நடந்தது. இந்நிலையில், அமைச்சர் கே.என். நேரு மற்றும் மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, தற்போது கவுன்சிலராக இருக்கும் ராமதாஸ், வட்டச் செயலாளர் பி.ஆர்.பாலசுப்பிரமணி யன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) பாலாஜி வழக்கை 2024 ஜனவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். எம்எல்ஏ மீது வழக்கு இதேபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டு எம்எல்ஏக்களாக இருந்த சௌந்தரபாண்டி யன், ஸ்டாலின் குமார், தற்போது மேய ராக இருக்கும் அன்பழகன் ராமதாஸ், பால சுப்பிரமணியம் ஆகியோர் திருச்சி ரயில்வே ஜங்சன் பகுதியில் நீட் தேர்வுக்கு எதிராக நடை பெற்ற போராட்டத்தில் அனுமதியின்றி கலந்து கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கும் திருச்சி ஒன்றாவது நீதித் துறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இது தொடர்பான விசாரணையிலும், மேற்கண்ட 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆஜராகி னர். இந்த வழக்கு விசாரணையும் ஜனவரி 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.