districts

img

மொபைல் போன் செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை

இரு மடங்காக அதிகரிப்பு மதுரை, மே 20-  ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் ரயில்  நிலைய பதிவு அலுவலகங்க ளில் வழங்கப்பட்டு வந்தன.  பின்பு பயணிகள் நீண்ட வரி சையில் காத்திருக்காமல் பய ணச்சீட்டு பெற தானியங்கி  இயந்திரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மொபைல் போனிலே பய ணச்சீட்டு பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்தது. காகிதம் பயன்படுத்தாமல் பயணச்சீட்டு பதிவு செய்யும் இந்த முறை சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய் வதாக பாராட்டு பெற்றது. பயணிகளின் வசதிக்காக மதுரைக் கோட்டத்தில் உள்ள  அனைத்து ரயில் நிலையங்க ளிலும் மொபைல் போன் மூலம் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு பதியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த புதிய திட்டத்தை பற்றி விளக்கி கூறவும் பிரச்சாரம் செய்யவும் மூத்த  ஊழியர்கள் அடங்கிய குழுக் கள் அமைக்கப்பட்டன. அவர்  களும் இந்த மொபைல் போன் செயலி பற்றிய விப ரங்களை பயணிகளுக்கு விளக்கி கூறினர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 26,000 பயணிகள் மொபைல் போன் பயணிச்  சீட்டுகள் மூலம் பயணம் செய்  தனர். தீவிர பிரச்சாரம் கார ணமாக இந்த எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 53000  ஆக உயர்ந்தது. இந்த சாத னையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களுக்கு மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் டி. எல்.  கணேஷ் ரொக்கப் பரிசு மற் றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். அப்போது  உதவி கோட்ட வர்த்தக மேலாளர்கள் பாலமுருகன், மணிவண்ணன் ஆகியோ ரும் உடன் இருந்தனர்.  யூடிஎஸ் மொபைல் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செயலியில் நமது மொபைல் எண்ணை உள்ளீடு  செய்து ஓ.டி.பி. எண் பெற்று  உள் நுழையலாம். இத னால் பாஸ்வேர்டு என்ற சங்  கேத வார்த்தையை ஞாபகம்  வைத்திருக்க வேண்டிய தில்லை. ரயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்  திற்கு அப்பால் வீட்டிலிருந்த படியே எந்த ஒரு ரயில் நிலை யத்திலிருந்தும் எந்த ஒரு ரயில் நிலையத்திற்கும் பய ணச்சீட்டு பதிவு செய்யலாம். இருந்தபோதிலும் அந்தப் பயணச்சீட்டை பதிவு செய்த  நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் அல்லது பயணம் துவங்கும் நிலை யத்தில் இருந்து புறப்படும்  முதல் ரயில் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த முடி யும். முன்பு 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து மட்டுமே பயணச்சீட்டு பதிவு  செய்யும் வசதி இருந்து  வந்தது. ரயில் நிலையத் திற்குள் வந்து விட்டால், ‘க்யூ ஆர்’ கோடு பயன் படுத்தியும் பயண சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். இது புதிய வசதிகள் மூலம் பயணிகள் மொபைல் போனில் எளிதாக பயண  சீட்டு பதிவு செய்து கொள்  ளலாம். இதன் மூலம் மொபைல் போன் பயணச் சீட்டு மூலம் பயணம் செய்  வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.