தஞ்சாவூர், அக்.28 - தஞ்சாவூரில் புதை சாக்கடைப் பிரிவு தூய்மைப் பணியாளர்களுக்கு 3 மாதங்க ளாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சியிலுள்ள 51 வார்டுகளிலும் புதை சாக்கடையில் தூய்மைப் பணியில், ஒப்பந்த அடிப்படை யில் 146 பேர் பணியாற்றி வருகின்றனர். புதை சாக்கடையில் அடைப்புகளைச் சீர் செய்தல், மண் அள்ளுதல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள் ளும் இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த தூய்மைப் பணியாளர்கள், 3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் தங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும், தீபாவளியை கொண்டாட முடியாமல் தவிப்பதாகவும் கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பணியா ளர்கள் கூறுகையில், “3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது குறித்து ஒப்பந்த நிறுவனத்திடம் கேட்டபோது, மாநகராட்சி நிர்வாகம் பணம் வழங்கவில்லை எனக் கூறி னர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் பணம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றனர். தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்வி டத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஆணையரிடம் பேசி தீர்வு காணலாம் என அனைவரையும் காவல்துறையினர் மாநகராட்சி அலுவல கத்துக்கு அழைத்துச் சென்றனர்.