districts

img

தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

தஞ்சாவூர், செப்.5-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்தி ரம் கடலோர கிராமப் பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகையாக கடலோர பாதுகாப்பு  குழுமத்தினர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடல் வழியாக தீவிர வாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக, ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்ற னர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு  குழும காவல்துறையினர் மற்றும் உள்ளூர் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இணை ந்து ‘சாகர் கவாச்’ எனப்படும் கடல் பாது காப்பு ஒத்திகையை செப்டம்பர் 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தினர்.  இதில், ஒத்திகையின் முதல்நாளான 4-ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமப்பகுதிகளில் கடலோரக் காவல் படை ஆய்வாளர் மஞ்சுளா தலை மையில், கடலோர பாதுகாப்பு குழுமத்தி னர் மற்றும் காவல்துறையினரும் இணை ந்து கடற்கரையில் தீவிர ரோந்து மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதி யில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி  சோதனை மேற்கொண்டனர்.  மேலும், கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் மீனவர்களின் படகுகளில் ஏறி, அடையாள அட்டை, படகு பதிவு புத்தகம் ஆகியவற்றை சோதனை செய்த னர். கடலுக்குள் அந்நிய நபர்களின் நட மாட்டம், சட்டவிரோத செயல்பாடுகள் இருந்தால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.  ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை யை முன்னிட்டு தஞ்சை மாவட்ட எல்லை  தொடக்கமான தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி, நிறைவு பகுதியான கட்டுமாவடி வரை கடலோர பாதுகாப்பு குடும்பத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டனர். இதில் கடலோர காவல் குழு மத்தினர், சட்டம் ஒழுங்கு காவல்துறையி னர், தனிப்படையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.