districts

img

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா பந்தல் கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், நவ.1 - தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன்  ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா வையொட்டி, கோயில் திருச்சுற்றில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பார் போற்றும் புகழுடைய தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை, அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழ னின் 1039 ஆவது சதய விழா நவம்பர் 9 அன்று தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான  நவ. 10 அன்று ராஜராஜசோழன் சிலைக்கு  மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற வுள்ளது. இந்த இரு நாள் விழாவில் பட்டி மன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சி களும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, பெரியகோயிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரண் மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக்  குழுத் தலைவர் து.செல்வம், துணைத் தலை வர் எஸ்.சி. மேத்தா, உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் ப.மாதவன்,  சதய விழாக் குழு உறுப்பினர்கள் ராமநாதன்,  இரா.செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.