districts

திருச்சி முக்கிய செய்திகள்

மமக தலைவர் ஜவாஹிருல்லா பொங்கல் வாழ்த்து

பாபநாசம், ஜன.13 -  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழவர்களின், உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும்,  தைப்பொங்கல் நன்நாளின் சிறப்பை மென்மேலும் வளர்த்தெ டுப்போம். விவசாயத்திற்கு உதவும் கருவிகளையும், கால்நடைகளையும்  போற்றும் பண்பாட்டின் அடையா ளமான, இந்த மானுடப் பெருவிழாவில் மதச்சார்பின் மையைப் பேணி சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்திட உறுதியேற்போம். சாதி மத பேதம் கடந்து தமிழர்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்வோம். மக்கள் ஒற்றுமை திருவிழாவாக, தமிழ்வெளியெங்கும் கொண்டாடி மகிழும் இவ்வேளையில் தீமைகள் அகல  வேண்டும். நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோத ரத்துவம் ஆகியவை செழித்தோங்க வேண்டும். ஒட்டுமொத்த மாக தமிழர்களின் வாழ்வில், தமிழர் திருநாளில் இறைவன்  எல்லா நன்மைகளையும் வழங்கட்டும்” என கூறியுள்ளார்.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு  மைதானத்தில் எஸ்.பி., ஆய்வு

திருச்சிராப்பள்ளி, ஜன.13 - திருச்சி சூரியூரில் மாட்டு பொங்கலன்று நடைபெற வுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.செல்வ நாகரத்தினம் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் பெரிய சூரியூ ரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, தமிழர் களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெறுவது வழக்கம். இதில், திருச்சி, கரூர், பெரம்ப லூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொள் வர். நிகழாண்டும் போட்டி நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  போட்டி நடைபெறும் மைதானத்தையும், அங்கு மேற் கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், திருச்சி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வ நாகரத்தி னம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.  அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வை யாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மைதானத்துக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  காளைகளால் ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு களை மேற்கொள்வது குறித்து, போட்டி நடத்துவோருக்கும், போலீசாருக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.