கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் செ.நந்தகுமார்-து.நிஷா தம்பதியரின் புதல்வியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தணிக்கையாளர் செல்லமுத்து - சாந்தி தம்பதியரின் மகன்வழி பேத்தியமான ந.முகிழியின் 3 ஆவது பிறந்தநாளையொட்டி, சிஐடியு நடத்தும் சென்னை அயனாவரத்தில் உள்ள நிர்மல் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.