தஞ்சாவூர், நவ.13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றிய 24 ஆவது மாநாடு, ஊரணிபுரத்தில் தோழர் வி.சுந்தர்ராஜ் நினை வரங்கில் நடைபெற்றது. எம்.எஸ்.கலியபெரு மாள் கொடியேற்றினார். வி. பெரியசாமி அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். வர வேற்பு குழுத் தலைவர் கே.ராமசாமி வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் என்.சுரேஷ்குமார் துவக்க உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு வாழ்த்திப் பேசி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு வும், ஒன்றியச் செயலாள ராக எஸ்.பாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டனர். ஊரணிபுரம் சந்தை பேட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வணிக வளாகம் அமைத் துக் கொடுக்க வேண்டும். பட்டுவிடுதி பாசனக் குளத் திற்கு, கல்லணைக் கால்வாய் வாய்க்காலில் இருந்து செல்லும் கிளை வாய்க்கால் ஆக்கிர மிப்பை அகற்றி பாசனத் திற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.