தஞ்சாவூர், ஜூன் 13- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி ஆத னூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மனோகரன். இவ ரது மனைவி லதா. இவர் களுக்கு ருனாஃப் ரிச்சர்ட் ராய் (28), ரூஷோ (25), என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குவைத்தில் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் என்.பி.டி.சி என்ற கட்டுமான நிறுவனத்தில் தரக் கட்டுப் பாடு ஆய்வாளராக ருனாஃப் ரிச்சர்ட் ராய் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தனது இல்லத் திறப்பு விழாவிற்கு சொந்த ஊர் திரும்பியவர், ஒன்றரை மாதம் ஊரில் இருந்து விட்டு சமீபத்தில்தான் மீண்டும் குவைத் திரும்பினார். இந்நிலையில், திங்கள் கிழமை அதிகாலை குவைத் தில் நடந்த தீ விபத்தில் ஒரே கட்டிடத்தில் தங்கியிருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் விபத்தில் சிக்கினர். இதில் 41-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தாக கூறப்படுகிறது. அதே கட்டிடத்தில் தங்கியிருந்த ருனாஃப் ரிச்சர்ட் ராய் குறித்த விவரங்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை. அவருடைய செல் போன் எண்ணுக்கு பெற்றோர் கள் தொடர்பு கொண்ட போது அணைத்து வைக்கப் பட்டுள்ளதாக கூறுகிறது. அங்கு தங்கியுள்ள அவரு டைய நண்பர்களிடம் கேட்ட போதும் எந்த தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து தகவ லறிந்த பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ் தான், மக்களவை உறுப்பி னர் எம்.எம்.அப்துல்லா ஆகி யோர் மூலம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். தங்களது மகன் குறித்த எந்த தகவலும் தெரியாத தால், அவர்களின் பெற் றோர், உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள னர். தங்களின் மகனை பத்திர மாக மீட்டுத் தாருங்கள் என அவரது பெற்றோர் கண்ணீர் மல்க ஒன்றிய, மாநில அர சுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். இந்நிலையில் அமைச் சர் செஞ்சி மஸ்தான் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “ருனாஃப் ரிச்சர்ட் ராய் இறந்து விட்டதாக தெரி வித்துள்ளார். ஆனால், வெளியுறவுத் துறை அலுவ லர்கள் இதுகுறித்து உறுதிப் படுத்தியதாக தெரிய வில்லை.