தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட ரோஸ் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு ரூ.6,84,770 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 63 கே.வி.மின் மாற்றியை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா இயக்கி வைத்தார். இதில் பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி, மின்வாரிய செயற் பொறியாளர் திருவேங்கடம், உதவி செயற்பொறியாளர் கருணாகரன், உதவி பொறியாளர் ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.