districts

img

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக! சிபிஎம் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.19 - மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், லெனின், ரேணுகா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகி யோர் பேசினர். இதில் மாவட்டக்குழு, பகுதி குழு செயலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மின்வாரிய மேற்பார்வை பொறியா ளர் பிரகாசத்திடம் சுமார் 2,500 மனுக்கள் வழங்கப்பட்டன.

;