திருச்சிராப்பள்ளி, ஜன.21 - மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்டுள்ள அரசாணை 140-ஐ திரும்ப பெற வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் திங்களன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன், மாநில துணைத்தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி ஆகியோர் பேசினர்.