districts

சாலை மறியல் போராட்ட அறிவிப்பு எதிரொலி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், ஜூலை 13-  

     இடிந்துவிழுந்த சானூரப்பட்டி மேம் பாலத் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு உயர் அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என சாலை மறியல் போராட்ட அறிவிப்பால்  நெடுஞ்சாலைத்துறையினர் உறுதியளித் துள்ளனர்.

     தஞ்சாவூர் மாவட்டம், செங்கிபட்டி சானூரப்பட்டி கிராமம் திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜூன்  20-ஆம் தேதி சானூரப்பட்டி மேம்பாலத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.  

    தடுப்புச்சுவர் இதுவரை சரிசெய்யப்பட வில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திருச்சிராப்பள்ளி -  தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சானூ ரப்பட்டியில் சாலைமறியல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

     இதையடுத்து பூதலூர் வட்டாட்சியர், செங்கிப்பட்டி காவல்துறை உதவி ஆய்வா ளர் ராஜகோபால், நெடுஞ்சாலைத்துறை, பொறியாளர் அனிசுல் நகீம், செங்கிப்பட்டி வருவாய் ஆய்வாளர் மற்றும் சானூரப் பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர், தமிழரசன், தமிழ்நாடு பொது வுடைமை இயக்கம் தேவதாஸ், மதிமுக ஒன்றியச் செயலாளர் நந்தகுமார், சானூ ரப்பட்டி துணைத் தலைவர் சுப்பிரமணி யன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னர்.

    அப்போது, சானூரப்பட்டி அணுகு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்  டும். இடிந்த பாலத்தை முழுமையாக அகற்றி விட்டு தூண் பாலம் அமைத்துத் தர வேண்டும். தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையின் வளைவுகளில் மின் விளக்குகள் அமைத்துதர வேண்டும்.  தஞ்சாவூர்-பூதலூர், பூதலூர்-செங்கிப்பட்டி  நான்கு ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைத்துத் தர வேண்டும். அணுகுச்  சாலையில் வேகத்தடை அமைக்க வேண் டும் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

    இதற்கு அதிகாரிகள் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள தேசிய நெடுஞ்சாலை  துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தப் படும். உயர் அலுவலர்களை கலந்து ஆலோ சித்து, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என  தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தெரி வித்தனர். இதையடுத்து சாலை மறியல் ஒத்திவைக்கப்பட்டது.