கும்பகோணம், ஜன.5- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மற்றும் இதயா மகளிர் கல்லூரி இணைந்து சாலை பாது காப்பு விழிப்புணர்வு பட்டிமன்றத்தை நடத்தின. இதயா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி நடுவராக செயல்பட்டார். பட்டிமன்றத்தில் சாலை விபத்துக்கு பெரிதும் காரணம் அவசரமா, அலட்சி யமா, அறியாமையா என்கின்ற தலைப்பில் கல்லூரி மாணவியர்கள் மாணவியர்கள் உரையாற்றினர். இறுதியாக பட்டிமன்ற நடுவர் இரா. பொன்முடி கூறுகையில், சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு விழிப்புணர்வு நட வடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். விபத்து ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் அறியாமைக்கும், அவசரத்திற்கும் அடிப்படையாக உள்ள அலட்சியம்தான் பெரிய விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே, அனைவரும் விழிப்போடு இருந்து விபத்துகளை தவிர்ப்போம் என்று தீர்ப்பளித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் .ஶ்ரீதரன், துணை மேலாளர் ராஜேஸ், இதயா கல்லூரி முதல்வர் யூஜின் அமலா, கல்லூரி மாணவியர்கள் அரசு போக்கு வரத்துக்கழக அலுவலர்கள், பணியா ளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.