தஞ்சாவூர், டிச.30 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றி யத்தில் வனத்துறையின் கூடுதல் செயலாளர் அனுமதி அளிக்காததால் மண் சாலை தார்ச்சா லையாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலையை தரம் உயர்த்த போராடும் கிராம மக்களின் பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சி, துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் சுமார் 300-கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டுக் குத் தேவையான பொருட்கள் வாங்க, மருத்துவ மனை செல்ல, மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல, 500 மீட்டர் தூரத்தில் உள்ள புதுக்கோட்டை சாலை சென்று பேருந்தை பிடிக்க வேண்டும். இதற்கிடையே துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் வன இலாகாவுக்கு சொந்தமான முந்திரிக்காடு உள்ளதால், 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை இருந்து வந்தது. கடந்த 1991 ஆம் ஆண்டில் ஏற்கனவே இருந்த முந்திரிக் காட்டை அழித்துவிட்டு, புதிதாக முந்திரிச் செடிகள் நடுவதற்கு பணிகள் நடந்த போது, கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக் கையை ஏற்று, வனத்துறை அனுமதியோடு 90 ஏக்கர் பரப்பளவு உள்ள முந்திரிக்காட்டில், துலுக்க விடுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தார்ச்சாலை வரை மண் சாலை அமைக்கப்பட்டது. மழை பெய்யும் நேரங்களில் மண் சாலை சேதம் அடைந்து சேறும், சகதியுமாக போக்கு வரத்திற்கு பயனற்று போய் விடுவதால், பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே, மண் சாலையை தெருவிளக்கு வசதியுடன் கூடிய தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்ற னர். அரசுக்கும், வனத்துறைக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு சென்னை தலைமை வன பாதுகாவலர் உத்தரவின் பேரில், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர்கள் கள ஆய்வு செய்து, இறுதியாக அரசு வனத்துறை கூடுதல் செயலாளரின் அனுமதிக்காக கோப்பு நிலு வையில் உள்ளது. இதுகுறித்து துலுக்கவிடுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமநாதன் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மண் சாலையை தெருவிளக்குடன் கூடிய தார்ச் சாலையாக மாற்றுவதற்காக போராடி வருகிறோம். ஊராட்சி தீர்மானம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் அனுமதி, மாவட்ட, மண்டல வனத் துறையின ரின் கள ஆய்வுக்குப் பின், சென்னை தலைமை வனப் பாதுகாவலர் மாநில அரசின் கொள்கை ரீதி யான ஒப்புதலை வழங்கிட கடந்த மார்ச் 9 அன்று பரிந்துரை செய்தார். பின்பு, அரசு கூடுதல் செயலாளருக்கு அனுப்பி, அதன் தொடர்ச்சியாக மாநில அரசால் எழுப்பப் பட்ட குறைகளை நிவர்த்தி செய்தும், அரசு கூடு தல் செயலாளர் அனுமதி அளிக்காமல் உள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. துலுக்கவிடுதி வடக்கு கிராம மக்கள் மட்டு மின்றி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர் களுக்கும் இந்த சாலை பயனுள்ளதாக இருக்கும். எனவே, அரசு கூடுதல் செயலாளர் உடனடியாக சாலையை மேம்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.