மயிலாடுதுறை, டிச.31 - மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே யுள்ள பிச்சைகட்டளை கிராமப் பகுதியில் நான்கு வழிச் சாலை பணி நடைபெறுகிறது. இப்பணிக்காக கான்கிரீட் ஏற்றிச் சென்ற லாரிகளால் சாலைகள் சேதமடைந் தன. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர் ஊராட்சி பிச்சைகட்டளை கிரா மத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை பணிக்காக பிச்சைகட்டளை கிராமம் வழியாக கனரக வாகனங்கள் கான்கிரீட் ஏற்றி செல்வதால் சாலை சேதமடைகிறது.
இதனால் பிச்சைகட்டளை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கான்கிரீட் ஏற்றிச் சென்ற லாரிகளை மறித்து சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் சரவணன் மற்றும் பொறையார் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை யில் சாலைகளை சீரமைத்து தருவதாக உறுதியளித்த தின் பேரில் மறியலை கைவிட்டனர்.