புதுக்கோட்டை, ஜூலை 17-
ஒரு வருடத்திற்கு முன்பாக ஒப்பந்தம் போட்டும் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்காததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெள்ளக் கொல்லை, புதுக்குடியிருப்பு கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், புதுக் கோட்டை மாவட்டம் ஆலங் குடி தாலுகா அரைப்பட்டியி லிருந்து கீழையூர் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமான மிகவும் பழுத டைந்துள்ளது. இதனால், வெள்ளக்கொல்லை, புதுக்குடி யிருப்பு, தெற்கு அரையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் கண்டு கொள்ள வில்லை.
இந்நிலையில், மேற்படி சாலையை புதிய தார்ச்சாலை யாக அமைக்க கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. சாலை வேலை நடைபெறுகிறது என கடந்த மாதம் விளம்பரத் தட்டி யும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலை அமைக்கும் பணி எதுவும் நடைபெற வில்லை. இதனால், நாங்கள் தொடர்ந்து பல்வேறு சிரமங் களைச் சந்தித்து வருகிறோம்.
எனவே, மேற்படி சாலையை விரைந்து செயல் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து செயல்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி போராட்டத் தில் ஈடுபடுவோம்” என கூறப் பட்டுள்ளது.