பாபநாசம், பிப்.1- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அரையபுரம் தட்டு மால் படுகையில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. விளைநிலங்களும் உள்ளன. இந்தப் பகுதிக்கு சாலை அமைத்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது சாலை அமைக்கும் பணி நடை பெறுகிறது.