அறந்தாங்கி, மார்ச் 2- புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி யில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப் பட்ட சாலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கட்டுமாவடியில் இருந்து கடற்கரை செல்லும் சாலையில் மீனவர் தெரு, முஸ்லிம் தெரு ஆகிய பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணிக் கின்றனர். மேலும் இச்சாலை வழியா கத்தான் ராமநாத சுவாமி ஆலயம் மற்றும் கடற்கரைக்கு செல்ல முடியும். இந்த சாலை அமைக்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் எந்தவித பராமரிப்பும் இன்றி இருந்தது. இதனால் மழைக் காலங்களில் சாலையில் பயணிக்க முடி யாமல் பொதுமக்கள் தவித்தனர். இந்நிலையில், மாவட்ட கவுன்சிலர் நஜ்முதீன் முயற்சியில், சுமார் 33 லட்சம் மதிப்பீட்டில் இந்த சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதிய தார்ச் சாலை பணி நிறைவுற்றது. தற்போது இச் சாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்ட கவுன்சிலர் நஜ்முதீன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.