புதுக்கோட்டை, ஜூன் 22-
கோவிலில் வழிபாடு உரிமை கேட்டதற்காக பட்டியலின இளை ஞர்களை கொலைவெறியுடன் தாக்குதல் தொடுத்த சாதி ஆதிக்க வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வியாழக் கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த விராச்சி லைக் கிராமத்தில் ஸ்ரீமது அடைக்க லம்காத்தாள் அம்மாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பட்டி யலின மக்களுக்கு வழிபாட்டு உரி மையும், அக்கோவிலில் காலங் காலமாக அவர்கள் செய்யும் கட மைகளைச் செய்வதற்கு அனுமதி கோரியும் வலியுறுத்தி வந்துள்ள னர். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், விராச்சிலை ஸ்ரீமதி அடைக்கலம்காத்தாள் அம் மாள் கோவில் 10-ஆம் நாள் தி ருவிழா கடந்த ஜூன் 14 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தலித் மக்களை சில சாதி வெறியர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பட்டி யல் இனத்தைச் சேர்ந்த வசந்த குமார்(25), பிரசாத்(19), பாரதி ராஜா(21), மோகன்(21), ஜெகதீஸ் (19), ஆண்டியப்பன்(63), சின்னம் மாள் (75) ஆகியோர் படுகாயம டைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ள னர்.
இதுகுறித்து பனையப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரி வித்தும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லையெனவும், தாக்கு தல் நடத்தியவர்களிடம் தலித் மக் கள் தாக்கியதாக புகார் மனு பெற்றுக்கொண்டு வழக்கை நீர்த்துப் போகச்செய்யும் நட வடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக பட்டியலின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தப் பிரச்சனையில் காவல் ஆய்வாளரையும் சாதிவெறியர் கள் தாக்கியுள்ளனர். தனது துறை யைச் சார்ந்த அதிகாரி தாக்கப்பட்ட தைக்கூட சாதி ஆதிக்க வெறியர் களுக்கு ஆதரவாக மூடிமறைக்கும் வேலையில் மாவட்ட காவல்துறை இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலித் இளை ஞர்கள் மீது தாக்குதல் தொடுத்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். முக்கி யக் குற்றாவாளிகள் அனைவரை யும் வழக்கில் சேரக்க வேண்டும். கொலை முயற்சி, கொடுங்காயம், ஆள்கடத்தல் உள்ளிட்ட சட்டப்பிரி வுகளை வழக்கில் சேர்க்க வேண் டும். பனையப்பட்டி காவல் ஆய்வா ளரைத் தாக்கியது தொடர்பாக தனி யாக வழக்குப் பதிவுசெய்து நட வடிக்கை எடுக்க வேண்டும். மேற் படி கோவிலில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு மண்ட கப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்துக் கட்சியினர் சார்பில் வியாழக்கிழமையன்று திருமயத்தில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், விசிக மாநில துணைச் செயலளார் தெ. கலைமுரசு, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகா னந்தம், பாஜக மாநில நிர்வாகி புரட்சிக்கவிதாசன், நாட்டுத்தலை வர் சுப்பையா, தமிழக மக்கள் முன் னேற்றக்கழக மாவட்ட ஜஸ்டின் திர வியராஜ், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் டி. சலோமி, செயலாளர் சி.ஜீவானந் தம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமண வாளன், சு.மதியழகன், துரை.நாரா யணன், மாதர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பாண்டிச்செல்வி, பொரு ளாளர் சி.வைகைராணி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தலை வர்களிடம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரபாகர், துணைக் கண்காணிப்பளார் அப் துல்ரகுமான் உள்ளிட்டேர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில், குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படு வார்கள் என காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள் ளப்பட்டது.