districts

img

நெல் கெள்முதலை தனியார் மயமாக்கக் கூடாது!-விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.8-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், புறநகர் மாவட்டத் தலைவர் சிதம்பரம், புறநகர் மாவட்டப் பொருளாளர் ராமநாதன், மாநகர் மாவட்டப் பொருளாளர் தனபால், மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் சங்கர், புறநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் பாலமுருகன், சேகர், புறநகர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் முருகேசன், சீனிவாசன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முகமது அலி கண்டன உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் குருநாதன் நன்றி கூறினார். திருவாரூர் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயி  கள் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் எம்.சேகர் கோரிக்கை விளக்கி கண்டன உரையாற்றினார். மாநிலகுழு உறுப்பி னர் கே. தமிழ்செல்வி, மாவட்ட நிர்வாகி கள் எஸ்.சாமிநாதன், கே.சுப்பிர மணியன்,ஜி. பவுன்ராஜ், எம். ஜெயபிர காஷ் எஸ். முத்துசெல்வன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டு ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவிலில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் எஸ்.துரைராஜ், மாநிலக்குழு உறுப்பினர் பி.குணசுந்தரி, ஒன்றிய செயலாளர்கள் தெட்சிணாமூர்த்தி, என்.சந்திரமோகன், வழக்கறிஞர் ஞானபிரகாசம், செம்பனார்கோவில் ஒன்றியத் தலைவர் தோட்டம் ஜோதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  போராட்டத்தை ஆதரித்து சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வீ.எம்.சரவணன் ஆகியோர் உரையாற்றினர். பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் பேருந்து நிலையம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் செல்லமுத்து, வட்டக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், கிளைச் செயலாளர் முத்துசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.  தொடர்ந்து, நெல் கொள்முதலை தனியாருக்கு தாரைவார்த்திடும் ஒனறிய அரசின் நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமே தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்தும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், விவசாய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். வேப்பந்தட்டை பேருந்து நிலையத்தில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் சதாசிவம், ஒன்றியப் பொருளாளர் ராமு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் எழுத்தாளர் இரா. எட்வின், சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் பி.ராஜேந்திரன், முன்னாள் வட்டத்தலைவர் கோவிந்தன், கரும்பு சங்க மாவட்ட நிர்வாகிகள் வரதராஜன், மாயவன், பால் சங்க மாநிலக் குழு உறுப்பினர் செங்கமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் பசும்பலூர் அர்ஜுனன், ராஜாமணி அம்மாள், செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.  தொடர்ந்து, ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் திரளான விவசாயிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.