districts

img

வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நாள் நிகழ்ச்சி திருவாரூர் ஆட்சியர் பங்கேற்பு

திருவாரூர், மே 25-  

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட 39 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.  

    நிகழ்வில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து, வருவாய்துறையின் சார்பில் 244 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையும், முதியோர் உதவித்தொகைக்கான ஆணை 32 நபர்களுக்கும், புதிய மின்னணு குடும்ப அட்டை 1 நபருக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 நபர்களுக்கு மரகன்றுகளும் என 291 நபர்களுக்கு ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 357 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

   இதில், முத்துப்பேட்டை வட்டாட்சியர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சந்தான கோபால கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.