districts

img

விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் குளத்தூர்,இலுப்பூர், விராலிமலை, பொன்னமராவதி ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 250 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.