திருவில்லிபுத்தூர்,ஜூன் 28-
ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் நடவடிக்கை யைக்கண்டித்தும் காலிப்பணி யிடங்களில் இளைஞர்களை பணி யில் அமர்த்தக் கோரியும் தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் போக்குவரத்து கழக நல அமைப்பின்திருவில்லி புத்தூர், இராஜபாளையம் கிளை கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
திருவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட துணைத் தலைவர் காத்தப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தங்கப்பழம், திருவில்லிபுத்தூர் கிளைச் செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளர் தங்கமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பணியின் போது இறந்த தொழி லாளர்களின் வாரிசுகளுக்கு உட னடியாக வேலை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.