districts

img

ரயில்வேயில் ஓய்வு ராணுவத்தினரைச் சேர்க்க டிஆர்இயு எதிர்ப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 18- ரயில்வேயில் பாதுகாப்புப் பிரிவான இன்ஜினியரிங் பிரிவில் கேட் கீப்பர் பணி களை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ஒப்  பந்த முறையில் அமர்த்தும் முடிவைக் கை விட வேண்டும், கிராசிங் கேட்டுகளில்  குடி நீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து கொடுக்க வேண்டும். கேட் டூட்டி பார்ப்பவர்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும். கேட்  டூட்டி பார்ப்பவர்களை சமூக விரோதி களிடமிருந்து பாதுகாக்க பாதுகாப்புக் கருவியான ரக்சாக் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தட்க்ஷனா ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி ராப்பள்ளி ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் ஆர்.கரிகாலன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் பி.க.மாதவன்,  துணை  பொதுச் செயலாளர்கள் எஸ்.ராஜா, ஆர்.சர வணன், உதவிக் கோட்டத் தலைவர்ஆர். அழகிரி, உதவிக் கோட்டச் செயலாளர் ஆர். ரஜினி, உதவிக் கோட்டத் தலைவர் ஆர்.  சம்பத் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.