நாகப்பட்டினம், செப்.4 - தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் நாகப் பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிட வாயிலில் மாநி லம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாப்பு.ராமநாதன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன், தொழிற் சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி கோரிக் கையை விளக்கி உரை யாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் வி.பால சுப்ரமணியன் நிறைவுரை யாற்றினார். அரசாணை 204 இன்படி ஓய்வூதியர்களுக்கு கட்ட ணம் இல்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். அதிக கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனை கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காப் பீட்டு திட்டத்தில் செலவிட்ட மருத்துவ செலவினங்களை மீள கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்து வக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை கலைய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை விளக்கி இந்த தர்ணா நடைபெற்றது.