தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், மொழிப்போர் தியாகி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 124 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை அழகிரிசாமி மணிமண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கு.சு.ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, மணிமண்டபத்தில் உள்ள பட்டுக்கோட்டை அழகிரிசாமி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.