districts

img

காந்தி ஜெயந்தி: டெல்டா மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டம்

புதுக்கோட்டை, அக்.2 - காந்தி ஜெயந்தியை ஒட்டி, புத னன்று டெல்டா மாவட்ட கிரா மங்களில் கிராம சபைக் கூட்டங் கள் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சிறுமருதூர் ஊராட்சி யில், நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு. அருணா பங்கேற்றார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கை யில், மாவட்டத்தில் உள்ள 497  கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளான குடிநீர், சாலை, மின்சாரம், சுகாதாரம், பேருந்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார்.  மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம்,  தரங்கம்பாடி வட்டம், செம்ப னார்கோயில் ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு, தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், தூய்மை பாரத  இயக்க திட்டம், ஜல் ஜீவன்  இயக்கம் உள்ளிட்ட 14 கூட்டப் பொருள் குறித்து விவாதிக்கப் பட்டது. முன்னதாக, சமூகநலத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம்” பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர்  தலை மையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து இக்கூட் டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 3000 மதிப்பீட்டில் வேளாண் இடு பொருட்களும், தோட்டக்கலைத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.225 மதிப்பிலான காய்கறி விதை களையும் ஆட்சியர் வழங்கினார். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ரெகு நாதபுரத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சரபோஜி ராஜபுரத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் பூமாவும், ராஜகிரி அடுத்த மணல் மேட்டில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் சமீமா பர்வீ னும் தலைமை, மெலட்டூர் அருகே  கொத்தங்குடியில் நடந்த கூட்டத் திற்கு ஊராட்சித் தலைவர் பழனி யும் தலைமை வகித்தனர். சாலிய மங்கலம் அருகே இரும்பு தலை யில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சித்  தலைவர் பாலாஜியும், கோவிந்த நாட்டுச் சேரியில் ஊராட்சித் தலை வர் ஜெய்சங்கரும் தலைமை வகித்தனர்.

5 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கழுவந்தோண்டி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

அரியலூர், அக்.2 - அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் நகராட்சியை விரிவாக் கம் செய்யும் வகையில் அங்கராய நல்லூர் கிழக்கு மற்றும் மேற்கு, புதுச்சாவடி, ஜெயங்கொண்ட சோழ புரம், கழுவந்தோண்டி உள்ளிட்ட 5 ஊராட்சிகளை ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களின் கருத்தை கேட்க  கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் அரசு அறி வுறுத்தி உள்ளது. இந்நிலையில் காந்தி ஜெயந்தி யையொட்டி புதனன்று கழு வந்தோண்டி கிராமத்தில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில், “ஊராட்சியை ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து” தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சி மன்றத் தலைவரிடம் கடிதத்தை வழங்கி யுள்ளனர்.  இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “கிராம ஊராட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்,  தொகுப்பு வீடு வழங்கும் திட்டம்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிராம ஊராட்சிக்கு வழங்கப்படுகின்றன. நகராட்சியுடன் இணையும் போது இவ்வகையான திட்டங்கள் தங்க ளுக்கு கிடைக்காது. மேலும் ஊராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி  உள்ளிட்ட குறைந்தபட்ச வரி களையே செலுத்த முடியாத பெரும் பாலான குடும்பங்கள் உள்ளதால், நகராட்சியுடன் இணையும்போது பல்வேறு வரிகளை அதிகளவில் கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் ஊராட்சி மக்கள் பெரு மளவில் பாதிக்கப்படுவோம். ஜெயங்கொண்டம் நகராட்சி யின் வரி வசூலை அதிகரிக்கவே, அருகில் உள்ள ஊராட்சிகளை நக ராட்சியுடன் இணைக்க அரசு முனைப்பு காட்டுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். எனவே  தங்களது ஊராட்சியை நகராட்சி யுடன் இணைக்க கூடாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சி மன்றத் தலைவரிடம் கடிதத்தை வழங்கியுள்ளோம். மேலும் இணைப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டினால் பல்வேறு போராட்டங்களை நடத்தவும் தயாராக உள்ளோம்” என்றனர்.