கரூர், ஏப்.25-
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, பாலவிடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு மாரியாயி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். திங்கள்கிழமை இரவு பால விடுதி, தரகம்பட்டி, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை யும், பலத்த காற்றும் வீசியது பலத்தை காற்றினால் பொன்னுசாமியின் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து வெளிப்பக்கமாக விழுந்தது. சுவர் வெளி பக்கமாக இடிந்து விழுந்ததால் வீட்டுக்குள் படுத்திருந்தவர்கள் உயிர் தப்பினர்.
தகவலறிந்து பாலவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று பொன்னுசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பொன்னுச்சாமிக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தர நட வடிக்கை எடுக்கப்படும் என பாலவிடுதி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.