தஞ்சாவூர், அக்.23 - தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலை சமுத்திரம் அருகே இலகுரக வாகனங்களும், பொதுமக்க ளும் சாலையை கடந்து செல்ல ஏதுவாக சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டும் என தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப் பினர் ச.முரசொலி, ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்க ரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். புதுதில்லியில், ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்த தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வழங்கிய மனுவில், “தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் மன்னார்குடி ஆகிய சட்டமன்ற தொகுதி களில் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதிகளை செய்து தரவும், பல்வேறு சாலை திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேபோல், தஞ்சாவூர் அருகே தென் பெரம்பூரில் வெண்ணாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டித் தர வேண்டும். தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலை சமுத்திரத்தில் சாலையை கடக்க ஏதுவாக சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி.,யிடம் உறுதி அளித்தார்.