திருவாரூர், பிப்.6- திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புத்தகங்கள் வழங்கினர். சந்திப்பின்போது தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்பு சாமி, மாவட்டத் துணை தலைவர் எஸ். சாமிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.பவுன்ராஜ், எம். ஜெயபிரகாஷ், எஸ். இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைந்து வழங்குவதை ஆட்சியர் உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.