districts

img

உயர் மின்கோபுர விளக்கு அகற்றம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரியலூர், டிச.31- சிலால் கிரா மத்தில் பள்ளி அருகே ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்கை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் அரசு பள்ளியில் ரூ.38 லட்சத்தில் இரண்டு புதிய வகுப்பறைக்காக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி  காம்பவுண்ட் சுவரை ஒட்டி மூன்று லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மாற்று இடத்தில்  வைக்காமல் அதனை அடியோடு சாய்த்து விட்டனர். அதி லிருந்த ஒரு சில மின் விளக்குகளை மர்ம நபர்கள் திருடிச்  சென்றனர். சில விளக்குகள் அந்த இடத்திலேயே நொறுங்கி விட்டன.  அரசு பணத்தை வீணடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த உயர்மட்ட மின் கோபுர விளக்கை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.