பாபநாசம், டிச.28 - பாபநாசத்தை அடுத்த ராஜகிரியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது தேவரடியார் குளம். சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம், கடந்த ஆட்சிக் காலத்தில் தூர்வாரப்பட்டது. இந்தக் குளத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் இல்லாததால் குளத்தின் அருகிலுள்ள சாலைகள் அரிக்கப்படுகின்றன. இந்தக் குளத்தின் அருகில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. எனவே குடியிருப்பு வாசிகளின் நலன் கருதி இந்தக் குளத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புவதுடன், நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.