கும்பகோணம், ஜுன் 30-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநக ராட்சிக்கு உட்பட்ட அண் ணல் அக்ரஹாரம், எலுமிச்சங் காய் பாளையம், தாராசுரம் சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கும்பகோணம் நெடுஞ் சாலை துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கும்ப கோணம் மாமன்ற உறுப்பி னர் எ.செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.அருள ரசன், மாநகர செயலாளர் கே. செந்தில்குமார், மாநகர குழு உறுப்பினர் பி.பார்த்தசாரதி, பழ.அன்புமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாதர் சங்க தலைவர் ஏ.எஸ். சுமதி, செயலாளர் எஸ்.சுமதி, கிளை செயலாளர்கள் மற்றும் எலுமிச்சங்காய் பாளையம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் பயன் படுத்தி வரும் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராசுரம் அண்ணல் அக்ர ஹாரம், மாவட்ட கிராம இணைப்பு சாலையில் கனரக வாகனங்கள், சிறிய ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களால் நெருக்கடி ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளா லும் விபத்துகள் ஏற்படு கின்றன. இதிலிருந்து மக்களை பாதுகாக்க தாரா சுரம், லட்சுமி நகர், எலுமிச்சங் காய் பாளையம், கீழத்தெரு, விநாயகர் ஆலயம் கடை வீதியின் குறுகிய திருப்பங் கள், பட்டீஸ்வரம் வழி ரயில்வே ரோடு பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்க ளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி னர்.
அப்போது நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் ஒரு வாரத்தில் கோரிக்கையை நிறை வேற்றி தருவதாக உறுதிய ளித்தனர். இதனால் போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.