தஞ்சாவூர், மே.7 -
பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி வழியாக மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை வட்டார ரயில் பயணிகள் நலச் சங்கத்தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகரம் தமிழ்நாட்டில் இரண்டா ஆவது பெரிய நகரமாகும். மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர் சோலை, கள்ளழகர் கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்கள், திருமலை நாயக்கர் மகால் போன்ற சுற்றுலா தலங்கள், சென்னை உயர் நீதிமன்ற கிளை, மருத்துவமனைகள் போன்ற முக்கியமான இடங்கள் மதுரையில் உள்ளன.
மதுரை தென் தமிழகத்தின் முக்கியமான தொழிற்துறை மையமாகவும் வர்த்தக மைய மாகவும் உள்ளன. தென்மாவட்டங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதியில் அதிக அளவில் வசித்து வரு கின்றனர்.
இப்பகுதியில் விளைவிக்கப்படும் பொருட்க ளை கொண்டு செல்லவும், மதுரை பகுதியில் இருந்து ஜவுளி, மளிகை பொருட்களை கொண்டு வரவும் போதிய போக்குவரத்து வசதி கள் இல்லாமல் உள்ளது.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதா ரண்யம், அகஸ்தியம்பள்ளி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேரா வூரணி, அறந்தாங்கி பகுதியில் இருந்து மதுரை க்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் உள்ளது.
எனவே, மதுரைக்கு காலை, இரவு நேரத்தில் செல்ல மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப் பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கு இரு முனைகளில் இருந்தும் ரயில்களை இயக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.