பாபநாசம், மார்ச் 5 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டையை அடுத்த பசுபதிகோயில் மெயின் சாலையில் மூன்று இடங்களில் ஐந்து அடுக்கு வேகத் தடைகள் அமைக்கப் பட்டுள்ளன. இதனால் இந்தச் சாலையில் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறு கின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் கூறுகையில், “பசுபதி கோயி லில் தஞ்சாவூர் - கும்பகோணம் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாக னங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை யில் தனியார் மெட்ரிக் பள்ளி, அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதன் அருகில் மூன்று இடங்களில் 5 அடுக்கு வேகத் தடைகள் உள்ளன. இதனால் கழுத்தெழும்பு, இடுப்பெழும்பு தேய்மானம் உள்ளவர்கள், குடல் இறக்க நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்தச் சாலை யில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது சிரமப்படுகின்றனர். தாராசுரம் அருகே இரண்டு இடங்களில் மூன்று அடுக்கு வேகத்தடை அமைத்துள்ள நிலையில், இங்கு மட்டும் 5 அடுக்கு வேகத் தடை எதற்கு? தாராசுரத்திலாவது தேசிய நெடுஞ் சாலை செல்கிறது. பசுபதிகோயிலில் ஐந்து அடுக்கு வேகத் தடையை எடுத்து விட்டு, ஒரே வேகத் தடையாக போட வேண்டும்” என்றார்.